- திண்டுக்கல்
- இந்திய தேர்தல் ஆணையம்
- டாஸ்மேக் மேலாண்மை
- திண்டுக்கல் தடை காவல்துறை
- டிஎஸ்பி
- சுந்தர பாண்டியன்
- தஸ்மாக் மாவட்டம்
- மேலாளர்
- ரவிச்சந்திரன்
- டாஸ்மாக்
- தின மலர்
திண்டுக்கல், மார்ச் 27: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் உத்தரவின்படி திண்டுக்கல் மதுவிலக்கு போலீஸ் டிஎஸ்பி சுந்தரபாண்டியன்,திண்டுக்கல் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் டாஸ்மாக் உதவி மேலாளர் மற்றும் மதுவிலக்கு போலீசார் திண்டுக்கல் நகர், புறநகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் பார்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது சட்ட விரோதமாக மது விற்பனை செய்த சுரேஷ் (45), பாண்டி (40), காமாட்சி (48), காளிமுத்து (52) உள்பட 7 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 155 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து சட்ட விரோதமாக மது விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவிலக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
The post திண்டுக்கல் அருகே மது விற்ற 7 பேர் கைது appeared first on Dinakaran.